புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. அந்த மதுக்கடையினால் ஏராளமான தொந்தரவுகளை அனுபவித்து வந்த பொது மக்கள், மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது அடித்து உடைத்தனர். இதையடுத்து அங்கிருந்த மதுக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியானதை அடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இதைத்தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், மதுக்கடை அமைப்பதற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தின் இடையே ஒருவர் மதுக்கடைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அப்போது ஆவேசமடைந்த இந்திராணி என்ற பெண் அந்த நபரை செருப்பைக் கொண்டு தாக்க முற்பட்டார். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தை அடுத்து பேராட்டத்தை பொது மக்கள் வாபஸ் பெற்றனர்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…