முதல்வருக்கு பிராண்ட் இல்லை! ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும் – அண்ணாமலை பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

வரும் ஜூலை 9-ம் தேதி பாஜகவின் சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்க உள்ளது என்று அண்ணாமலை அறிவிப்பு.

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, உலகளவில் தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் நாடு இந்தியா தான், இதற்கு காரணம் பிரதமர் மோடி. பிராண்ட் இந்தியாவாக இருக்க கூடிய பிரதமர் மோடியை வைத்து, தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். வெளிநாடுகளில் பிரதமருக்கு பிராண்ட் உள்ளது, முதலமைச்சருக்கு பிராண்ட் இல்லை.

முதல்வர் என்ன மாதிரியான தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறையை மாற்றியது மதுரைக்கு செய்த துரோகம். அமைச்சரின் ஆடியோ உண்மையானது. அதற்காக அவரை துறை மாற்றம் செய்தது ஏற்புடையது அல்ல. அமைச்சருக்கே இந்த நிலைமை என்றால் திராவிட மாடல் ஆட்சியில் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகள் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கும்போதே பிரிஜ் பூசன் சரண் சிங்-ஐ கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர். கைது செய்தால் தான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடர்வோம் என்று கூறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

விளையாட்டு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என தெரியவில்லை எனவு கூறிய பாஜக மாநில தலைவர், கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் கூறிய புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,  சிஎஸ்கே அணியின் வெற்றிக்கோப்பை பெருமாள் கோயிலில் வைத்து பூஜை போடப்பட்டது. ஆண்டவன் அருளால் மட்டுமே தமிழ்நாட்டில் நல்லது நடக்கும். வரும் ஜூலை 9-ம் தேதி பாஜகவின் சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்க உள்ளது என்றும் மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

7 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

8 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

8 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

9 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

10 hours ago