எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

Published by
செந்தில்குமார்

வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முத்தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்ற பெண் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய வேண்டும் என்று ஆசை கொண்ட இவர் அதற்கு நிதி தேவைப்பட்ட காரணத்தினால் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரது பயணத்துக்கு கழக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி இருந்தது. இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை உச்சியை அடைய தனது பயணத்தைத் தொடங்கிய முத்தமிழ்செல்வி எவரெஸ்ட்டின் அதிகபட்ச உயரத்தை எட்டி சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார். இவரது சாதனைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

23 minutes ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

1 hour ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

2 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

3 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

3 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

3 hours ago