ரேஷன் பொருள்கள் கிடைக்கிறதா? கடைகளுக்கு பறந்த உத்தரவு.. உணவுத்துறை எச்சரிக்கை.!

Published by
கெளதம்

சென்னை : கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், சில ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மே மாதம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, தேர்தல் முடிவுக்கு பிறகு, ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வரை முறையாக பொருள்கள் கிடைக்கவில்லை என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என உணவுத்துற தெரிவித்துள்ளது.

புகார் எண்

ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

36 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

3 hours ago

ஐயோ அவரா? “அவரு ரொம்ப டேஞ்சர்”…ரிஷப் பண்டை புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்!

லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…

5 hours ago