விழுப்புரத்தில் பரபரப்பு.! 17வயது சிறுமி கர்ப்பம்.! கொன்று புதைத்த கொடூர காதலன்.!

Published by
மணிகண்டன்

கர்பமாக்கிய காதலனை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமி கொலை செய்யப்பட்டார். வாலிபர் கைது செய்யப்பட்டார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, உள்ள பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின்  கீழ் ஊழியர்கள் வேலை செய்து கொண்டு இருக்கையில் வாய்க்காலுக்காக பள்ளம் தோண்டினர். அப்போது  இளம் பெண்ணின் சடலம்  தெரியவந்தது.

காவல்துறையினர் விசாரணையில் 17 வயது இளம் பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர், அகிலன் என்பவர் இந்த சிறுமியை காதலித்து வந்தது தெரியவந்ததும்  சென்னையில் இருந்த அகிலனை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அகிலன் திடுக்கிடும் உண்மைகளை கூறினார். அகிலனுக்கும் 17 வயது சிறுமிக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால் திருமணம் செய்து கொள்ள சிறுமி கட்டாயப்படுத்தியதால் அவரை கொன்று புதைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அகிலன் மீது போக்ஸோ மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

6 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

46 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago