உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகிறது. கொரோனவால் பலியும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் முன்னெச்சரிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 1251 பேர் பாதித்துள்ளார்கள், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. தினந்தோறும் பாதிப்பு அதிகரித்து வருவதால், போதுமான சுகாதார கட்டமை வசதிகள் பற்றாக்குறையாக இருக்கிறது. சுகாதார கட்டமைப்பில் சிறந்து விளங்கும் நாடுகளே செய்வதறியாது திணறி வருகின்றன. இந்த நிலையில் காலியாக இருக்கும் பெரிய இடங்கள், தனியாருக்கு சொந்தமான வளாகங்கள் போன்றவைகளை அரசிடம் ஒப்படைத்து கொரோனாவுக்கு தனிமை முகமாக மாற்ற ஒப்புதல் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என மு.க.ஸ்டாலினின் மனுவை மாநகராட்சி ஆணையரிடம் எம்எல்ஏ சேகர்பாபு வழங்கினார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…