ஆளுநர் இந்த உயர்பதவியில் நீடிக்க தகுதியற்றவர்; ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

Published by
Muthu Kumar

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த, குடியரசுத்தலைவருக்கு  அனுப்பிய தனது புகார் கடிதத்தில், ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நமது இந்திய நாடு இறையாண்மை மிக்க மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடு, இதில் ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை.

அதனால் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதியாக மாறும் ஒருவர், ஆளுநர் பதவியில் தொடரக்கூடாது. மாநில அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருவதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வப்போது அரசியல் கருத்தையும், சர்ச்சையாக பேசிவருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர் ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர் சிபிஐ வேண்டுகோள் கொடுத்ததும் காலதாமதம் செய்துவருவது, அவரின் அரசியல் சார்பையும் ஒருதலைபட்சமானவர் என்பதையும் வெளிக்காட்டுகிறது.

இதனால் உயர்பதவியில் வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்பதை அழுத்தமாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இந்த உயர் பதவியில் நீடிப்பது குறித்த முடிவை எடுப்பது தொடர்பாக குடியரசுத்தலைவரின் முடிவுக்கே விடுகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

7 hours ago

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

8 hours ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

8 hours ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

9 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

10 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

11 hours ago