ஆளுநர் இந்த உயர்பதவியில் நீடிக்க தகுதியற்றவர்; ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

Published by
Muthu Kumar

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத்தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த, குடியரசுத்தலைவருக்கு  அனுப்பிய தனது புகார் கடிதத்தில், ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நமது இந்திய நாடு இறையாண்மை மிக்க மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடு, இதில் ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை.

அதனால் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதியாக மாறும் ஒருவர், ஆளுநர் பதவியில் தொடரக்கூடாது. மாநில அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருவதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வப்போது அரசியல் கருத்தையும், சர்ச்சையாக பேசிவருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள ஆளுநர் ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர் சிபிஐ வேண்டுகோள் கொடுத்ததும் காலதாமதம் செய்துவருவது, அவரின் அரசியல் சார்பையும் ஒருதலைபட்சமானவர் என்பதையும் வெளிக்காட்டுகிறது.

இதனால் உயர்பதவியில் வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்பதை அழுத்தமாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இந்த உயர் பதவியில் நீடிப்பது குறித்த முடிவை எடுப்பது தொடர்பாக குடியரசுத்தலைவரின் முடிவுக்கே விடுகிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

48 minutes ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

1 hour ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

2 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

2 hours ago

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

13 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

14 hours ago