மாணவர்களுக்கு இலவசமாக செல்போன் வாங்கி கொடுத்த தலைமை ஆசிரியர்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர் சேர்க்கை தொடங்கியது. பஸ் வசதியில்லாத இக்கிராமத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் முதல் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் செல்போன் வாங்கித் தர முடிவு செய்தார். இதன்படி மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளில் பள்ளியில் சேர்ந்த 4 மாணவ- மாணவிகளுக்கு செல்போன் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் ஞானராஜ் அவர்கள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் எந்த வகுப்பிற்கு புதிதாக மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கு செல்போன் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும் 2 கி.மீ. தூரத்தில் உள்ள அண்ணாநகரில் இருந்து படிக்க வரும் மாணவ- மாணவிகள் வந்து செல்ல சொந்த செலவில் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…