திடீரென தேதி மாற்றப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா.! காரணம் இதுதானா.?

Published by
மணிகண்டன்

திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவானது ஜூன் 3இல் இருந்து ஜூன் 15க்கு மாற்றப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில், கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டமானது 7000 ஏக்கரில் 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் இறுதி கட்ட பணிகள் முடிந்து கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3இல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்று மாலை தேசிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது மழை அதிகளவில் பெய்ததால், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மழைநீரால் சேதமடைந்து உள்ளதால் அதனை சரிப்படுத்தி மேடை அமைக்க காலதாமதம் ஆகும் என்பதால் திறப்பு விழாவானது ஜூன் 3இல் இருந்து ஜூன் 15க்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஸ் குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வரவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

9 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

46 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

58 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago