ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோருக்கு ஏற்பட்ட அநீதி என்னை தூங்கவிடவில்லை – மு.க.ஸ்டாலின் உருக்கம்

Published by
Venu

ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஏற்பட்ட அநீதி என்னை தூங்கவிடவில்லை என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ்  மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் அரசியல் ,சினிமா,விளையாட்டு என பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்இந்த இரு பெயர்களை கடந்த சில நாட்களில் யாரும் மறந்திருக்க முடியாது. காவல் துறையின் வன்முறையால் ,அராஜகத்தால் இருவரையும் இன்று நாம் இழந்து நிற்கிறோம்.கடந்த இரு தினங்களாக இந்த சம்பவம் பற்றி வரும் செய்திகளை ,புகைப்படங்களை,உறவினர்கள் ,நண்பர்கள் பகிரும் சோகங்களை காணும் போது மனம் ஏற்க மறுக்கிறது. இந்த இருவருக்கும் ஏற்பட்ட அநீதி என்னை தூங்கவிடவில்லை.இவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அநீதியும் சோகமும் வார்த்தைகளால்  அடக்கமுடியாதவை.

இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையில் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றது.கொடூரத்தின் உச்சமாக ஆசன வாயிலில் லத்தியை கொண்டு தாக்குதல் ,நெஞ்சின் மீது ஏறி நின்று மிதித்தல் என்று  கேள்விப்படும் ஒவ்வொரு செய்தியும் மனதை உலுக்குகிறது.இந்த மனிதாவிமானமற்ற, மிருகத்தனமான செயல்கள் பேரதிர்ச்சி அளிக்கிறது.தன் கடையை ஊரடங்கு நேரத்தில் மூடுவதற்கு தாமதமாக்கினார்கள் என்ற காரணத்திற்க்காக இப்படிப்பட்ட  தாக்குதலை நிகழ்த்த காவல் துறைக்கு யார் அனுமதி தந்தது ? ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இன்னுயிருக்கு எந்த நிவாரணமும் ஈடு இல்லை.எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக நிற்க திமுக சார்பில் 25 லட்ச ரூபாய் நிவாரணமாக அளித்துள்ளோம்.இந்த வழக்கின் விசாரணை வேகமாகவும் ,தீவிரமாகவும்,நேர்த்தியாகவும்  நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க சட்ட ரீதியாகவும் திமுக துணை நிற்கும் .இந்த உயிர்பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர் தான். மக்கள் மன்றத்தால் விரைவில் அவர் தண்டிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

10 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

42 minutes ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

1 hour ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago