தி கேரளா ஸ்டோரி சர்ச்சை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்.!

Published by
கெளதம்

தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்படவில்லை என தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் விபுல்ஷா உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த தமிழக அரசு, “திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை. திரையரங்குகளே திரையிட முன்வரவில்லை” என குறிப்பிட்டுள்ளது.

the kerala story box office [Image source : file image ]

சர்ச்சைகளுக்கு மத்தியில் 100 கோடி வசூல்: 

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி ‘திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடிகளை அள்ளி வருகிறது. கடந்த 5-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

TheKeralaStory Ban [ImageSource- youtube]
தமிழ்நாட்டில் திரையிட மறுப்பு:

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என காரணங்களை குறிப்பிட்டு, தமிழகத்தில் பட விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட மறுத்தது.

[Image source : Twitter/@adah_sharma]

தமிழக அரசு விளக்கம்:

மாநிலங்களில் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கோரி தி கேரளா ஸ்டோரி படக்குழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மக்களிடம் வரவேற்பு இல்லாததால் திரையரங்குகளே படத்தை திரையிடுவதை நிறுத்திவிட்டனர் என்றும் திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

TheKeralaStory MPCM [Image source : bookmyshow]

தி கேரளா ஸ்டோரி:

இந்த படத்தை இயக்குனர் லதா சீனிவாசன் எழுத, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கியுள்ளார். படத்தில் ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி, சோனியா பாலா, தேவதர்ஷி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

26 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

53 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

3 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

5 hours ago