வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக போட்டியிட விருப்பும் தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிமுக தலைமையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தை நேற்று அதிமுக – பாமக இடையே நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பாமக சார்பில் ஜிகே மணி, ஏகே மூர்த்தி ஆகிய தலைவர்கள் மற்றும் அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனிசாமி, வைத்தியலிங்கம் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அப்போது, தாங்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை பாமக கொடுத்துள்ளது. அதில், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருப்போரூர், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி, சங்கராபுரம், ஆரணி, பென்னாகரம், காட்டுமன்னார்கோவில், வீரபாண்டி, அணைக்கட்டு, ஓசூர், நெல்வேலி, கலசப்பாக்கம், பாப்பிரெட்டிப்பட்டி, குன்னம், சோளிங்கர், திண்டிவனம், பண்ட்ருட்டி, ஜெயகொண்டம், மேட்டூர், ஆற்காடு உள்ளிட்ட தொகுதிகளை ஒத்துக்குமாறு அதிமுகவிடம் பாமக கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…