காவல்துறை அதிகாரியான விஜயகுமாரின் இழப்பு வேதனை அளிக்கிறது – ஆளுநர்

Published by
பாலா கலியமூர்த்தி

டிஐஜி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தமிழ்நாடு ஆளுநர் பதிவு.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை முகாம் அலுவலகத்தில் தனது பாதுகாவலரிடம் துப்பாக்கியை வாங்கி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணிச்சல் மிக்க நேர்மையான ஒரு அதிகாரி தற்கொலை செய்துகொண்டுது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தத்தால் தான் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் கூறப்படுகிறது.

இவரது மறைவிற்கு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், காவல்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், காவல்துறை அதிகாரியான விஜயகுமாரின் இழப்பு வேதனை அளிக்கிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், இளம், புத்தி கூர்மைமிகு அதிகாரி விஜயகுமாரின் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைகிறேன். டிஐஜி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த நிலையில், விஜயகுமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார் அவர்களின் இறுதி சடங்கு தேனியில் வைத்து நடைபெற உள்ளது . அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக தமிழக டிஜிபி செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

4 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

5 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

8 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

8 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

9 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

9 hours ago