#Breaking:தமிழக மீனவர்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமிநாசினி – நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published by
Edison

மதுரை:இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் 68 பேர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்நிலையில்,இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும்,கொரோனா அச்சம் இருப்பின் கிருமிநாசினி தெளித்ததற்கு பதிலாக தமிழக மீனவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதற்கிடையில்,68 மீனவர்களும் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிய நிலையில்,பொங்கலுக்கு முன் தமிழக மீனவர்களை மத்திய அரசு அழைத்து வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மேலும்,இலங்கை அரசு கைது செய்யும் தமிழக மீனவர்களை கண்ணியம் ,மனிதாபிமானத்துடன் நடத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 minutes ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

59 minutes ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

1 hour ago

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

18 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

19 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

20 hours ago