தீண்டாமை வேலி ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.! உயர்நீதிமன்றம் காட்டம்.!

Published by
மணிகண்டன்

கரூர் மாவட்டம் இடையப்பட்டி எனும் ஊர் அருகே உள்ள சித்திரசீலமநாயக்கன் எனும் ஊரில், மனுதாரர் (உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்) அண்மையில் கலப்பு திருமணம் செய்துள்ளார்.

கலப்பு திருமணம் செய்து ஊருக்குள் வந்த போது ஊர் மக்கள் அவரை ஊருக்குள் விடாமல் தடுத்துள்ளனர். மேலும், அவரது வீட்டை சுற்றி 4 புறமும் தீண்டாமை வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பது தான் பாஜகவின் தேர்தல் வாக்குறுதி – அண்ணாமலை

இத வழக்கு விசாரணையானது நீதிபதி இளங்கோவன் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதி, தீண்டாமை வேலி அமைக்கப்பட்டு இருந்தால் அது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. அந்த வேலி அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம் சித்திரசீலமநாயகன் ஊற்றில் தீண்டாமை வேலி அமைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக  பாலவிடுதி காவல் ஆய்வாளர் உரிய விசாரணை நடத்தி அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை வரும் நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago