#LocalBodyElection:பத்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம!

Published by
Castro Murugan

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பத்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதனையடுத்து,பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இதற்கடையில்,தொகுதி பங்கீடு,தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.அதே சமயம்,இதுவரை 37518  வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மேலும்,தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது.இதனால்,மாநகராட்சி,பேரூராட்சி அலுவலகங்களில் இன்று  வேட்புமனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.அதே சமயம்,முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது கட்சி ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பத்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.அதன்படி,சென்னை,ஆவடி, திருப்பூர்,வேலூர்,சேலம்,கும்பகோணம்,சிவகாசி,தூத்துக்குடி,பூந்தமல்லி,ஆம்பூர்,ஆற்காடு,திருத்தணி,எடப்பாடி உள்ளிட்ட 21 பகுதிகளுக்கான மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

59 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

1 hour ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

14 hours ago