chennai high court [Image Source-Wikipedia]
இறந்த மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற தாயாருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜீவனாம்சம் பெற வேண்டி சரஸ்வதி தொடர்ந்த வழக்கில், ரூ.6.22 லட்சம் வழங்க வேண்டும் என சரஸ்வதியின் கணவர் அண்ணாதுரைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சரஸ்வதி உயிரிழந்த நிலையில், அவரது தாயார் ஜெயா மகளின் வழக்கை தொடர்ந்து நடத்தினார்.
முன்னதாக 1991ஆம் ஆண்டு அண்ணாதுரை மற்றும் சரஸ்வதி தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றனர், இதையடுத்து ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என சரஸ்வதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலுவைத்தொகை ரூ.6,22,500-ஐ வழங்கக்கோரிய வழக்கில். அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வாரிசுரிமை சட்டத்தின் படி, மனைவி இறந்துவிட்டால் அவரது சொத்துகள் குழந்தைகள், பெற்றோருக்கு சேரும் என உத்தரவளித்து, அண்ணாதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…