நீண்ட நேரமாக காத்திருந்து லாரியின் முன்பதாக விழுந்து தற்கொலை செய்துகொண்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் பார்ப்போரை பதைபதைக்க செய்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத ஒருவர் கடந்த 2ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அவரது தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர் யார் என்பது குறித்து சரியாக தெரியவில்லை. இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து யார் என அடையாளம் காண்பதற்காக பார்த்த பொழுது அவர் வாகன விபத்தில் சிக்கி உயிர் இழக்கவில்லை வேண்டுமென்றே நீண்ட நேரம் காத்திருந்து தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நீண்ட நேரமாக ஆட்டோ குட்டியானை எல்லாம் செல்லும்பொழுது காத்திருந்த அவர் லாரி வருவதை கண்டு வேகமாக ஓடிச்சென்று லாரியில் இரண்டாவது சக்கரம் கடக்கும் பொழுது படுத்துள்ளார். இதனால் அவர் மீது லாரி ஏறி அவரது தலை முழுவதுமாகச் சேதம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் யார் என அடையாளம் தேடப்பட்டு கொண்டிருந்த நபர் தானாக தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…