பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தையை தூக்கில் தொங்க விட வேண்டும் என பதிவிட்ட நபர் கைது..!

Published by
லீனா

பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தையை தூக்கில் தொங்க விட வேண்டும் என பதிவிட்ட நபர் கைது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகள் பங்கேற்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் கருத்துக்களை அவரை போன்றே வேடமிட்டு ஒரு குழந்தை நடித்து காட்டியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் வெளிவந்த பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு லட்சக்கணக்கானோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் குழந்தைகளை அழைத்து பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு என்பவர் சமூகவலைதளத்தில் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்த குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள பதிவில், தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தையை அடித்துக் கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுக நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் என்பவர் கயத்தார் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷ் குமார் பாபுவை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

5 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

8 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago