transfer [Imagesource : Representative]
சென்னை ஆவடி காவல் ஆணையத்திற்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கடைகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 23 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இவர்களுக்கு அதிகாரிகள் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.
சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!
மேலும், குட்கா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் என மொத்தம் 26 பேரை ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். காவலர்களே குட்கா விற்பனை செய்பவர்களுக்கு உடந்தையாக இருந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 எஸ்.ஐ, 10 காவலர்கள் வெளி மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் பரிந்துரையின்படி, டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…