Sivagangai Railway Station [Image source : Twitter/@Srividhyaganap2]
சிவகங்கை மாவட்டத்தில் , சிவகங்கையில் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலான முக்கிய ரயில்கள் நிற்காமல் செல்வதாக பல வருடங்களாக அப்பகுதி மக்கள் புகாரளித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
குறிப்பாகா சிவகங்கையில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தாம்பரம் முதல் செங்கோட்டை வரும் விரைவு ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இதற்கு அரசு நடவடைக்காததை குறிப்பிட்டு, இன்று சிவகங்கை மாவட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சியினர் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். மேலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், சிவகங்கை ரயில் நிலையம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர்களை காவல்துறையினர் அதிரடியாய் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…