சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிரான குரல் எழுந்த வண்ணம் தான் உள்ளது. மாணவி அனிதா நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டது முதல் இந்த நீட் தேர்வை ரத்து செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட பாடில்லை. நேற்று முன்தினம், முதுநிலை மாணவர்களுக்கும், நேற்று இளநிலை மாணவர்களுக்கும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து ஏற்கனேவே இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…