சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்…!

Published by
லீனா

சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிரான குரல் எழுந்த வண்ணம் தான் உள்ளது. மாணவி அனிதா நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டது முதல் இந்த நீட் தேர்வை ரத்து செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட பாடில்லை. நேற்று முன்தினம், முதுநிலை மாணவர்களுக்கும், நேற்று இளநிலை மாணவர்களுக்கும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து ஏற்கனேவே இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

Recent Posts

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

1 minute ago

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…

1 hour ago

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

2 hours ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

2 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

5 hours ago