16 வயது சிறுமி நீண்ட நேரம் தொலைபேசியில் ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்ததால், அவரது அண்ணன் அச்சிறுமியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கணபதி நகரை சேர்ந்த முருகேசன் எனும் கூலித் தொழிலாளியான நபருக்கு, சங்கிலியம்மாள் எனும் மனைவியும், கார்த்திக் என்ற மகனும், 2 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக முருகேசன் உயிரிழந்த நிலையில் அவரது மகன் கார்த்தி கட்டிட வேலைக்கு சென்று தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் முருகேசனின் 16 வயதுடைய இளைய மகள் காயத்ரி கடந்த சில நாட்களாக ஆண் நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டனம் தெரிவித்தும் அச்சிறுமி கேட்காமல் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியின் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவர் வீட்டுக்கு சென்ற பொழுது தனியாக அமர்ந்த நிலையில் காயத்ரி நீண்ட நேரமாக ஆண் நண்பருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இதனை கண்ட பாலமுருகன் காயத்ரியை கடுமையாக தாக்கி அவளது குரல்வளையை நெறித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த காயத்ரியை பாலமுருகன் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.
இருப்பினும் காயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமியின் குரல்வளை நெறிக்கப்பட்டு, உடைந்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சிறுமியின் அண்ணன் பாலமுருகனை கைது செய்த பழனி போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…