மகனை மீட்க வேண்டும் ! நித்தியானந்தாவிற்கு எதிராக தாய் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

Published by
Venu
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது .

நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இது ஒருபுறம் இருந்தாலும் தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து  சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான பிடதி என்ற ஆசிரமம் நடைபெற்றது வருகிறது.இந்த ஆசிரமத்தில் ஈரோட்டை சேர்ந்த முருகானந்தம்  என்பவர் சேர்க்கப்பட்டார்.இவருக்கு ஆசிரமத்தில் பிராணசாமி என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் பார்க்க ஆசிரமத்தில் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆசிரமத்தில் அனுமதி அளிக்கவில்லை என்றும் மகனை மீட்கக்  கோரி அவரது தயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  வழக்கு தொடர்ந்தார்.மேலும் அவரது வழக்கில், பிடதி ஆசிரமத்தில்  தனது மகன் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தா மற்றும் ஈரோடு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கினை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இன்று  பிராணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.அப்பொழுது அவர்,சொந்த விருப்பத்தின்படி ஆசிரமத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.  சட்டவிரோதமாக தன்னை அடைத்து வைக்கவில்லை என்றும்  தெரிவித்தார். இதை ஏற்று,  வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Published by
Venu

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

10 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

49 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago