உயிரிழந்த தந்தையின் முன்பு மகன் செய்த நெகிழ்ச்சியான செயல்! கண்கலங்கிய உறவினர்கள்!

Published by
லீனா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருக்கு வயது 50. இவரது மகன் அலெக்ஸ்சாண்டர் (29). அலெக்ஸ்சாண்டருக்கும், அவருடன் இணைந்து வேலை செய்யும் பாலசுந்தரன் மகள் ஜெகதீஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில்,அடுத்த மாதம் 2-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், அலெக்ஸ்சாண்டரின் தந்தை தெய்வமணிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தெய்வமணி நேற்று மதியம் காலமானார். தெய்வமணியின் இழப்பால் வேதனையில் ஆழ்ந்த குடும்பத்தினர் மத்தியில், அலெக்ஸாண்டர் தனது தந்தையின் முன் திருமணம் நடக்க வேண்டும் என நினைத்து, பெண் வீட்டாரிடம் பேசியுள்ளார்.

அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், ஜெகதீஸ்வரி சிங்கனூர் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின் உயிரிழந்த தெய்வமணிக்கு புத்தாடைகளை உடுத்தி, கட்டிலில் அமர வைத்து, தெய்வமணி கையால் தொட்ட மாங்கல்யத்தை எடுத்து, அலெக்ஸ்சாண்டர் ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டி திருமணம் செய்து கொண்டார்.

அலெக்ஸ்சாண்டரின் இந்த செயல், உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஐபிஎல் 2025 : பிளேஆஃப் சுற்றுக்கு செல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…

11 minutes ago

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…

21 minutes ago

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

40 minutes ago

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

59 minutes ago

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

1 hour ago

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

2 hours ago