அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்.!

Published by
Muthu Kumar

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், செந்தில் பாலாஜி சகோதரர் விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு இரண்டு முறையும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில் கூடுதல் விவரங்களை பெற அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட நிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டது.

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்தததாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தன்னிடம் இருக்கும் ஆதரங்களுடன் சேர்த்து கூடுதல் ஆவணங்கள் சேகரிக்க வேண்டும் என்பதற்காக நேரில் ஆஜராகவில்லை என அசோக் தரப்பில் அமலாக்கத்துறையிடம் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago