ஓட்டுநர், நடத்துநர் தேர்வு செய்ய தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்கள் நடத்துநர்கள் தேர்வு செய்ய அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேர்வு செய்ய அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு 812 பேரை தேர்வு செய்ய தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தில் 812 நெகிழ்வுத்தன்மை அடிப்படையிலான DCC – Driver Cum Conductor பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓட்டுநர், நடத்துநர் தேர்வு செய்து பணி நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
