சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று இரவு கார் மூலம் கணவர் நடராஜன் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, பெங்களூர் சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். அதனைத் தொடர்ந்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், யாருடைய சொல்லுக்கும் நான் அடிபணிய மாட்டேன் என்றும் அதிரடியாக தெரிவித்திருந்தார்.
பின் சென்னை வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று இரவு கார் மூலம் கணவர் நடராஜன் இல்லத்திற்கு சென்றுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், இவரது தாஞ்சாவூர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.
அங்கு தஞ்சாவூர் விளார் கிராமத்தில் உள்ள குலதெய்வமான வீரனார் கோவில் வியாழக்கிழமை நடைபெறும் அவரது கணவர் நடராஜன் சகோதரியின் பேர குழந்தைகளுக்கான காதணி விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அதனை தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதி நடராஜனின் நினைவு நாளையொட்டி விளார் சாலையில் உள்ள அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…