சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று இரவு கார் மூலம் கணவர் நடராஜன் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, பெங்களூர் சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். அதனைத் தொடர்ந்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், யாருடைய சொல்லுக்கும் நான் அடிபணிய மாட்டேன் என்றும் அதிரடியாக தெரிவித்திருந்தார்.
பின் சென்னை வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று இரவு கார் மூலம் கணவர் நடராஜன் இல்லத்திற்கு சென்றுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், இவரது தாஞ்சாவூர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.
அங்கு தஞ்சாவூர் விளார் கிராமத்தில் உள்ள குலதெய்வமான வீரனார் கோவில் வியாழக்கிழமை நடைபெறும் அவரது கணவர் நடராஜன் சகோதரியின் பேர குழந்தைகளுக்கான காதணி விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அதனை தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதி நடராஜனின் நினைவு நாளையொட்டி விளார் சாலையில் உள்ள அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…