வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று முருகன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை இன்று முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே திருத்தணி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டது.
இந்நிலையில் சென்னையில் இருந்து வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.சென்னையில் உள்ள நசரேத் பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன் ,கடவுள் முருகனின் துணை கொண்டு திருத்தணியில் யாத்திரையை தொடங்க உள்ளோம்.வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்தார்.பின்னர் வேல் யாத்திரைக்கு தடை என நேற்று தெரிவித்த நிலையில், இன்று குறைந்த அளவு வாகனங்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…