ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த வீடியோ – 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து செய்யார் அரசு கலைக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை
செய்யார் அரசு கலைக்கல்லூரி பயிலும் மாணவர்களில் ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களில் சில மாணவர்கள் பகிடிவதை மூலம் துன்புறுத்தியதாக முதலாம் ஆண்டு மாணவர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
9 மாணவர்கள் சஸ்பெண்ட்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களில் சில மாணவர்கள் பகிடிவதை மூலம் துன்புறுத்தியதாக முதலாம் ஆண்டு மாணவர்கள் புகார் அளித்ததின் பேரில் சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன.
மாணவர்களின் புகாரின் அடிப்படையில் பகடிவதைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களின் விசாரணையின் அடிப்படையில் பகடிவதைச் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை மேலும் விசாரணை செய்யும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தொலைபேசி செய்திக்கிணங்கவும், அறிவுறுத்தலுக்கிணங்கவும் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தீர்மானத்தின்படியும் 9 மாணவர்களை ஒரு மாத காலம் தற்காலிக இடை நீக்கம் செய்து (Suspension) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாணவர்கள் இக்காலக்கட்டத்தில் கல்லூரி மற்றும் விடுதிக்கு வருதல் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…