போதையில் வற்புறுத்திய கணவனை கொன்ற மனைவி.!

Published by
murugan
  • கணவன் போதையில் அசைவ உணவை சாப்பிட சொல்லி தனது மனைவியையும், மகனையும் வற்புறுத்தி உள்ளார்.
  • ஆத்திரமடைந்த மனைவி அவரது தம்பி ,மகன்  ஆகியோர் சேர்ந்து கணவனை  கட்டியால் அடித்து கொன்று உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டி பகுதியை சார்ந்தவர் முத்துராஜ் இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு அரவிந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்துராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டர் ஆக வேலை செய்து வருகிறார்.

முத்துராஜ் குடிப்பழக்கம் கொண்டவர். சம்பவத்தன்று முத்துராஜ் அசைவ உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அந்த அசைவ உணவை தனது மனைவியையும், மகனையும் சாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால் தங்கள் உறவினர் ஒருவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பதால் அசைவ உணவை  சாப்பிட மறுத்து உள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் கேட்காமல்  முத்துராஜ் சாப்பிடுமாறு தனது மனைவியை துன்புறுத்தி உள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி , அவரது தம்பி சஞ்சய் , மகன் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து முத்துராஜை கட்டியால் அடித்து உள்ளனர். இதில் முத்துராஜ் இறந்துள்ளார்.

கணவன் இறந்ததை தொடர்ந்து கணவர் தம்பி அழகர் போன் செய்து விட்டு தனலட்சுமி அவரது மகன் ,தம்பி ஆகிய மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வீட்டிற்கு அழகர் சடலமாக கிடந்த முத்துராஜ் பார்த்துவிட்டு . வீட்டில் யாரும் இல்லாததால் உடனே வெம்பக்கோட்டை காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உறவினர் வீட்டில் இருந்த  தனலட்சுமி அவரது தம்பி சஞ்சய் , மகன் அரவிந்த் ஆகியோரை  போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

26 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago