போதையில் பணியில் இருந்த காவலரை எட்டி உதைத்த பெண்!

Published by
Rebekal

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகள் காரணமாக மதுபான கடையில் மது அருந்திவிட்டு பணியில் இருந்த காவலரை போதையில் எட்டி உதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவான்மியூர் பெசன்ட் நகர் ஈசிஆர் பகுதியில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்தப்பகுதியில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் அளவுக்கதிகமான போதையுடன் முறையற்ற நிலையில் கார் ஒன்றை ஓட்டி வருவதை அறிந்து காவலர்கள் அருகில் சென்றுள்ளனர். அவர்களிடம் போலீசார்  விசாரணை நடத்தியதில், அந்த இளம்பெண் போதையில் இருந்ததால் தாறுமாறாக காவலர்களை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் அவருடன் இருந்த நபருடன் சேர்ந்து இருவருக்கும் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.அதன் பின் போதையில் இருந்த இளம்பெண் அடையாறு பகுதியைச் சேர்ந்த காமினி எனவும் இளைஞர் அடையாறு பகுதியைச் சேர்ந்த ரோட்லோ ஸ்ரீபரசாத் என்பதும் தெரியவந்துள்ளது.

காமினி திரைப்படத் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண் போக்குவரத்து போலீசாரை ஆபாசமாக திட்டியுள்ளதுடன் தான் மீடியா துறையில் பணியாற்றுபவர் எனவும் அருகில் இருந்த காவலரை காலால் எட்டி உதைத்தும் போலீஸ்காரர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இந்த பதிவுகளை வைத்து தற்பொழுது காமினி மீது ஆபாசமாகத் திட்டுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காரில் மதுபோதையில் வந்த காமினி மற்றும் அவரது நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago