கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி. இவருக்கு சொந்தமாக 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இவரின் நிலத்தின் நடுப்பகுதியில் பாறைகள் உள்ளது. அந்த பாறையில் நடுவே கடந்த 10 நாள்களுக்கு முன் சுமார் 12 அடி நீளமுள்ள மலை பாம்பு சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் கண்மணி வழக்கம்போல நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து கண்மணி அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார். இதுகுறித்து தனது உறவினர்களிடம் கூறி உள்ளார்.
பின்னர் உறவினர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை ஒன்னகறை காட்டில் விட்டனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…