நாகர்கோவிலில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகசாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட 5 நிமிடங்களில் அதிவேகமாக திருக்குறள்களை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் யூதிஷா என்ற மாணவி 230 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொத்தவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வரும் யூதிஷா (13) என்ற மாணவி திருக்குறள்களை வேகமாக ஒப்புவிக்கும் திறமையை பெற்றவர். இவர் உலகசாதனைக்கான போட்டியில் பங்கெடுத்து 250 திருக்குறள்களை 3 நிமிடம் 25 விநாடிகளில் கூறி உலக சாதனை படைத்தார். தற்போது அந்த மாணவிக்கு ஆட்சியர் உள்ளிட்ட பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…