சிவகங்கை அருகே இளைஞரின் நெஞ்சில் பாய்ந்த சுழுக்கியை மருத்துவர்கள் எக்ஸ்ரே உதவியுடன் எடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கு அருகில் உள்ள உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 20 வயது ஆகும். இந்த இளைஞர் தவறி கீழே விழுந்த போது ’சுழிக்கி’ என்ற எலி குத்தும் ஆயுதம் நெஞ்சில் பாய்ந்துள்ளது.
இவரது வீட்டின் பின்புறம் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் வீட்டை சுற்றி எலிகள் தொல்லை இருந்து வந்தது.எனவே எலிகள் வீடுகளைச் சுற்றி தொல்லை கொடுத்து வந்துள்ளன.இந்த சமயத்தில் எலிகளை விஜய் விரட்டுவது வழக்க மாக இருந்தது. இந்நிலையில் தான் நேற்று இரவு விஜய் எலிகளை விரட்ட சென்றுள்ளார். அந்த சமயத்தில் கீழே விழுந்த போது எலியை குத்தும் சுழிக்கி, அவரது வலது மார்பில் பாய்ந்தது. இதனால் வலியால் துடித்த அவரை காரைக்குடி மருத்துவமனையில் அனுமதி அளித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் விஜயை மருத்தவர்கள் காப்பாற்றினார்கள். எக்ஸ்ரே உதவியுடன் விஜயின் உடலில் இருந்து சுழிக்கியை மருத்துவர்கள் எடுத்தார்கள்.மேலும் விஜய் தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…