விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா!

Published by
Rebekal

விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா  வைரஸின் தீவிரம் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே சென்றதால், கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் மீண்டும் இந்த தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த எட்டாம் தேதி ஆலோசனை நடத்தியது. இதை தொடர்ந்து ஐபிஎல் ,ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதி தேவை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறியிருந்தது. 15ஆம் தேதி மீண்டும் இந்த கூட்டம் நடக்க இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மத்திய அரசிடம் மேலும் சில கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை  சந்தித்து பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள், விரைவில் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வேண்டும் என கோரி மனு அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் திரையரங்குகளை உடனடியாக திறந்தால் தான் அதை நம்பி உள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், தங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

7 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

8 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

9 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

9 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

10 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

11 hours ago