கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஒரே நாளில் 4 கோவில்களில் திருட்டு….!

Published by
பால முருகன்

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஒரே நாளில் 4 கோவில்களில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலத்திலிருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில்,ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் நேற்று சில மர்ம நபர்கள் கோவிலின் சுவற்றின் மீது ஏறி அங்குள்ள அம்மன் சிலையின் கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தாலி செயின், மற்றும் உண்டியல் பணம் , கம்மல், மற்றும் அம்மனுக்கு அலங்கரிக்க வைத்திருக்கும் புடவைகள் அனைத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இந்நிலையில் அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலதில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் மற்றும் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, சித்தலிங்கேஸ்வர சுவாமி கோவிலின் உண்டிலை உடைத்து, மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

அதே பகுதியில் உள்ள ஐயப்பன் கோவில் உண்டியல் காணிக்கையையும் திருடி சென்றுள்ளனர். மேலும் இந்த நான்கு கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்ததால், அப்பகுதிலுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கெலமங்கலம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், 52 சிசிடிவி கேமராக்கள் கோவில்களுக்குள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில் அதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா வைத்த மறுநாள் கோவிலில் திருட்டு நடந்துள்ளது, மேலும் அந்த மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அதை வைத்து, கெலமங்கலம் யார் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

52 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

1 hour ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago