தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை., ஆனா இது கன்பார்ம் – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, மினி ஊரடங்குதான் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. குறைந்திருந்த பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, நாள் ஒன்றுக்கு பாதிப்பு 1000-ஐ கடந்து வருகிறது. இதனால் தமிழக தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்தவகையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு ஜனவரி திறக்கப்பட்ட பள்ளிககள் மீண்டும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. அனால் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு ஊரடங்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, மினி ஊரடங்குதான் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட தெரு, வீடு ஆகிய பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.

ஆகையால், சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின் கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து கண்டிப்பாக முழு ஊரடங்கு தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்படும் என தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை பார்த்தால் தெரிய வருகிறது. இருப்பினும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தங்களது சுய பாதுகாப்பு விதிமுறையை அனைவரும் பின்பற்ற வலிறுத்தப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

5 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

6 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago