திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் கிடையாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் கிடையாது என்றும் விரைவில் திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து நல்ல முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திமுக – காங்கிரஸ் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட இதுவரை தொகுதி பங்கீடு குறித்த முழுமையான ஒப்பந்தம் நிறைவு பெறவில்லை, தொடர்ந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டியளித்துள்ளார்.
கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸுக்கு 18 லிருந்து 22 வரை தொகுதி ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வரும் 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்ய வேண்டும் என்றும் கட்டாயம் உள்ளது. இதனால் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…