குற்றச்சாட்டு பதிவு அடிப்படையில் அமைச்சாராக நீடிக்க சட்டத்தில் எந்த தடையும் இல்லை.!

Published by
Muthu Kumar

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர் அமைச்சராக நீடிப்பதில் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையில், அமைச்சராக அவர் எந்த அடிப்படையில், அமைச்சராக நீடிக்கிறார் என  அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்ததில், அரசு தரப்பு தன் வாதங்களை முன்வைத்தது.

அதன்படி அமைச்சரவைக்கு இணையான நிர்வாகம் நடத்தவும், தனிப்பட்ட முறையில் அதிகாரங்களை செயல்படுத்தவும் ஆளுநருக்கு, அதிகாரம் கிடையாது என்று அரசியல் சட்ட விதிமுறைகளை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டது .

மேலும் அமைச்சர் குற்றவழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் நீடிப்பதில் தடை விதிக்கப்படும் என்றும், குற்றச்சாட்டு அடிப்படையில் அவரை பதவியிலிருந்து நீக்க எந்த சட்டவிதிமுறைகளோ, அரசியல் சாசனத்தில் குறிப்பிடவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து அதிமுக தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களில், சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது, அப்படியிருக்க எதன் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார். இது போன்று தமிழகத்தில் நடைபெறுவதால் தான் ஆளுநர் அவ்வாறு செந்தில் பாலாஜியை அமைச்சராக அனுமதிக்கமுடியாது என்று குறிப்பிட்டார் என வாதங்கள் வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

10 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

2 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

3 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

3 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago