Madras Highc [Image-Representative]
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர் அமைச்சராக நீடிப்பதில் சட்டத்தில் எந்த தடையும் இல்லை என அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையில், அமைச்சராக அவர் எந்த அடிப்படையில், அமைச்சராக நீடிக்கிறார் என அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்ததில், அரசு தரப்பு தன் வாதங்களை முன்வைத்தது.
அதன்படி அமைச்சரவைக்கு இணையான நிர்வாகம் நடத்தவும், தனிப்பட்ட முறையில் அதிகாரங்களை செயல்படுத்தவும் ஆளுநருக்கு, அதிகாரம் கிடையாது என்று அரசியல் சட்ட விதிமுறைகளை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டது .
மேலும் அமைச்சர் குற்றவழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் நீடிப்பதில் தடை விதிக்கப்படும் என்றும், குற்றச்சாட்டு அடிப்படையில் அவரை பதவியிலிருந்து நீக்க எந்த சட்டவிதிமுறைகளோ, அரசியல் சாசனத்தில் குறிப்பிடவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து அதிமுக தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களில், சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது, அப்படியிருக்க எதன் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார். இது போன்று தமிழகத்தில் நடைபெறுவதால் தான் ஆளுநர் அவ்வாறு செந்தில் பாலாஜியை அமைச்சராக அனுமதிக்கமுடியாது என்று குறிப்பிட்டார் என வாதங்கள் வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…