தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினமும் 10 மாவட்டங்களில் சுமார் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் அனைத்து மக்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிய வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களாகவே 104 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிகபட்சமாக நேற்று மட்டும் திருச்சியில் 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. மதுரை, கரூர், சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரியும், பாளையங்கோட்டை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பமும் , மேலும் கோவையில் 99 டிகிரியும் சென்னை 97 டிகிரியும் வெப்பமும் நிலவியது.
இந்நிலையில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை லேசான மற்றும் மிதமான மழை பெய்யும்.
மதுரை, கரூர், சேலம், தஞ்சாவூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் , திருத்தணி , வேலூர், ஆகிய 10 மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளை 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்றும் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளிய வர வேண்டாம் என்று எச்சரிக்கைபட்டுள்ளனர்
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…