சுயநலத்தால் அதிமுகவை அடமானம் வைத்தவர் பழனிசாமி என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் மறக்கமாட்டார்கள் – முக ஸ்டாலின்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை முக ஸ்டாலின் மணிமேகலை இலக்கியத்துடன் ஒப்பிட்டு பேசிய பின், இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் கையில் இருக்கும் அட்சயபாத்திரத்தை பறித்துக்கொண்டு, மீண்டும் பிட்சைபாத்திரத்தை கொடுக்க துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இலவச அரிசியில் ஊழல், மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய அரிசியை விற்றுவிட்டார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் என்று குற்றசாட்டியுள்ளார். பருப்பு ஊழல், காவிரி விவசாயிகளுக்கு துரோகம், வேளாண் சட்டத்துக்கு ஆதரவு என முதல்வர் பழனிசாமியின் துரோகத்தை கூறிக்கொண்டே போகலாம் என்றும் கபட நடிப்பால் பதவியை பெற்று, வஞ்சகத்தால் துரோகம் செய்து, சுயநலத்தால் அதிமுகவை அடமானம் வைத்தவர் பழனிசாமி என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் மறக்கமாட்டார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…