இது சுயமரியாதை, தன்மானத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் – மு.க.ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய பாஜக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த மாவட்டத்தில் வீரமணி என்ற அமைச்சர் ஒருவர் இருக்கிறார். முதல்வர் பழனிசாமி அமைச்சரவையில் மூன்று அருமையான மணிகள் இருக்கின்றனர், வேலுமணி, தங்கமணி, வீரமணி என்று விமர்சித்தார்.

அமைச்சர் வேலுமணி எதைப்பற்றியும் கவலைப்படாமல் அப்பட்டமாக ஊழல் செய்பவர். தங்கமணி மறைமுகமாக ஊழல் செய்வார். வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது உங்களுக்கு தெரியும். எல்லோருடைய பெயரிலும் மணி இருக்கிறது. அதனால் கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதுதான் அவர்களுடைய கொள்கை என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதுதான் அவருடைய தொழிலாக வைத்திருக்கிறார் என குறிப்பிட்டு பேசியுள்ளார். பாஜக அரசு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பினாமிகள், உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அவர்களுடைய ஆதாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதேபோல, அமைச்சர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதில் வீரமணியம் ஒருவர். ஆகையால், வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல, சுயமரியாதை, தன்மானத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…

16 minutes ago

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…

42 minutes ago

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

17 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

17 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

18 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

19 hours ago