“இந்தியாவில் நடைபெறும் 62% சாலை விபத்துகளுக்கு இதுதான் காரணம்” – பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!

Published by
Edison

இந்தியாவில் நடைபெறும் 62% சாலை விபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணமாகும் என்றும்,அனைத்து சாலைகளில் வேகவரம்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலையில்,நேற்றைய தினம்,நாகர்கோவிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து எதிர்புறம் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 மற்றும்  கார் டிரைவர் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில்,உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“நெல்லையில் அதிவேகமாக வந்த மகிழுந்து கவிழ்ந்து, சாலைத் தடுப்பைத் தாண்டி எதிர்திசையில் இரு சக்கர ஊர்தி மீது மோதியதில் மருத்துவ மாணவிகள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவ மாணவிகள் கொல்லப்பட்ட விபத்துக்கு அதிக வேகம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் 62% சாலைவிபத்துகளுக்கு அதிவேகம் தான் காரணமாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்நீதிமன்ற ஆணைகளை அரசுகள் பின்பற்றுவதற்கு மாறாக மீறுவது கண்டிக்கத்தக்கது!

அனைத்து சாலைகளில் வேகவரம்பு அறிவிப்புகள் இடம் பெற வேண்டும். விதிமீறலை கட்டுப்படுத்த அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வேகக் கண்காணிப்பு கருவிகள் பொறுத்தப்பட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago