வீரம் விளைந்த மண் இது! அந்த படங்களுக்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம்- ஜெயக்குமார்!

Published by
பால முருகன்

கடந்த சில நாட்களுக்கு முன்பு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் ஜெய்பீம், கர்ணன்,சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு விருதுகிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் ஒரு படத்திற்கு கூட விருதுகிடைக்கவில்லை. இந்நிலையில், ஜெய்பீம் படத்திற்காகவாது விருது கொடுத்திருக்கவேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் ” ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை, தி காஷ்மீர் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  ” வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும். ஏனென்றால் வடசென்னையின் பரம்பரியமே குத்துசண்டை வீரவிளையாட்டு எல்லாம். வடசென்னை என்றால் வீரம் விளைந்த மண் யாரும் எங்களை மோத முடியாது.

எனவே, இப்படியான ஒரு மண்ணில் ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த படத்திற்கு தேசிய விருது கண்டிப்பாக கொடுத்திருக்கலாம். அதைப்போலவே சில படங்களுக்கு கொடுத்திருக்கலாம். அதுக்காக நான் மற்ற படங்களை குற்றம் சொல்ல முடியாது. என்னைப்பொறுத்தவரை நான் காஸ்மீர் பைல்ஸ் நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கு என்று சொல்கிறேன்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்தரி இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படத்திற்கு தேசிய ஒருங்கிணைப்புக்கான நர்கிஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

2 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

2 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

3 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

4 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

5 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

12 hours ago