பச்சை மண்டல வாய்ப்பை இழக்கும் தூத்துக்குடி.!

Published by
Dinasuvadu desk

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நேற்று  மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. மேலும் 1485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. நேற்று  மட்டுமே 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்  சென்னையில்  2,008 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் 70 வயது மூதாட்டி  ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மீதம் இருந்த 26 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், தூத்துக்குடியில்கடந்த 18-ம் தேதிக்குப்பிறகு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், இன்று ஆண் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்தது. இன்னும் 4 நாள்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் தூத்துக்குடி பச்சை மண்டலமாக மாறி இருந்திருக்கும். ஆனால் இன்று 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago