பச்சை மண்டல வாய்ப்பை இழக்கும் தூத்துக்குடி.!

Published by
Dinasuvadu desk

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நேற்று  மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உள்ளது. மேலும் 1485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. நேற்று  மட்டுமே 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்  சென்னையில்  2,008 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் 70 வயது மூதாட்டி  ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மீதம் இருந்த 26 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், தூத்துக்குடியில்கடந்த 18-ம் தேதிக்குப்பிறகு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், இன்று ஆண் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக கொரோனா உறுதி செய்யப்படாமல் இருந்தது. இன்னும் 4 நாள்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் தூத்துக்குடி பச்சை மண்டலமாக மாறி இருந்திருக்கும். ஆனால் இன்று 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

24 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

58 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

5 hours ago