தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையயை வேறெங்கும் மாற்றும் எண்ணம் இல்லை – வேதாந்தா தலைவர்!

Published by
Rebekal

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கோரி மக்கள் நடத்திய பெரும் போராட்டத்தில் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்  வைக்கப்பட்டது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை ரத்து செய்யகோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு தற்பொழுதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை வேறு எந்த மாநிலத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவுவதற்கான கோரிக்கைகள் வந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை எனவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், நேர்மையான தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தனை ஆண்டுகள் ஸ்டெர்லைட் ஆலை  மூடியிருந்தாலும், தூத்துக்குடியில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு பணி வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

54 minutes ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago