தொடர் கொலைகள் காரணமாக தூத்துக்குடி நெல்லை ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

Published by
Dinasuvadu desk

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலைகள் நடந்து வருகிறது .இந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 கொலைகள் நடந்துள்ளது அதில் தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் நடந்த இரட்டைக்கொலை அதிர்ச்சியை ஏற்படத்தியது.அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக  மற்றொரு கொலை நடந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 19 கொலைகள் நடந்துள்ளது இந்நிலையில் தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்கள் நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களை மாற்ற டிஐஜி பிரவீன் குமார் அபிநவு உத்திரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய ஆய்வாளராக இருந்த கிருஷ்ணகுமார் தென்பாகம் குற்றப்பிரிவு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடபாக காவல் நிலைய ஆய்வாளராக இருந்த அருள் வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா, வடபாகம் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

1 minute ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

1 hour ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

2 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

13 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago