தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 25ம் தேதி முதல் மார்ச் 5 வரை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிகளுக்கு ரூ.15,000, தனி தொகுதிகளுக்கு ரூ.10,000 மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிகளுக்கு ரூ.10,000, தனி தொகுதிகளுக்கு ரூ.5,000 என விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து விட்டன. தற்போது, தேமுதிகவும் விருப்ப மனு தேதியை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருப்பதால், தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே விருப்ப மனுக்களை பெற வேண்டிய நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…