தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டியிருந்தது. அதுவும், முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை 6 மாதங்களுக்கும் மட்டும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்களை சிலர் விமர்சித்தும் சிலர் வரவேற்றும் வருகின்றன.
அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…